போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யுவதியின் அந்தரங்க பகுதியில் மீட்கப்பட்ட தங்க ஜெல்; வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் 24 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜூலை 4ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் யுவதியே தங்க ஜெல்லுடன் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில் , ‘கோல்டன் ஜெல்’ என்ற பொருளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என இந்த தகவல் வெளியானதும் பலரும் கூறியுள்ளனர்.
தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்திலுள்ள 24 வயதுடைய பெண்ணின் கைகளுக்கு இது எவ்வாறு வந்ததென ஆராயப்பட்டது.
தங்கம் கடத்தும் சில கடத்தல்காரர்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்புபட்டு மோசடியான முறையில் இவற்றினை கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதேசமயம் விமானம் மூலம் நாட்டுக்கு வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் உதவுகிறார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமை என கூறப்படுகின்றது.
விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பெரிய அளவில் சோதனைக்குட்படுத்தப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான பொருட்களை எடுத்துச் செல்வார்களா என்பதை பாதுகாப்புப் படையினர் சரிபார்க்கும் அரிதான சந்தர்ப்பங்களும் உள்ளன. அதற்கமைய, இந்த ஊழியர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தங்க ஜெல் கரைசல் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.
எனினும் யுவதி நடந்தவந்தபோது அவரது நடை ஒழுங்கற்ற முறையில் இருப்பது சிசிடிவி கண்காணிப்பில் அவதானிக்கப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஜெல் கரைசல் அடங்கிய 4 பொட்டலங்கள் மேலதிக விசாரணைக்காக தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்க ஜெல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போதே, தற்போது கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல் வடிவில் தயாரித்து சட்டவிரோதமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது. அதேவேளை ஜெல்லை மீண்டும் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை நல்ல வேலை, நல்ல சம்பள என கிடைத்தும் யுவதியின் இந்த சட்டவிரோத செயலானது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன், இந்த வெட்கக்கேடான செயலை செய்யதுணிந்த யுவதியை தென்னிலங்கை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.