போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
வெள்ளத்தில் மூழ்கிய தென்னிலங்கை
தென்னிலங்கையில் பெய்த அடைமழை காரணமாக பல வீதிகள் மற்றும் தாழ்வான நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
காலி பத்தேகம வீதியின் தலாபிட்டிய, சரேன்துகடே, தங்கேதர, பெலிகஹா மற்றும் வக்வெல்ல வீதியில் சங்கமித்த புர, மினுவாங்கொட ஆகிய பிரதேசங்களில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது.
அதேவேளை இந்த பகுதிகளில் உள்ள சில வீடுகள், கடைகளுக்கு கீழ் தண்ணீர் தேங்கியுள்ளது.
இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தொடர்ந்து பெய்த கனமழையால் வெசாக் அலங்காரங்கள் மற்றும் தன்சல்கள் போன்றவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.