போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
உணவு கேட்ட 16 வயது மகனை மதுபோதையில் கொடூரமாக தாக்கிய தந்தை
உணவு கேட்ட16 வயதான மகனை மதுபோதையில் தாக்கி விட்டு தப்பிச் சென்ற நிலையில் கைதான தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பதுளை பதில் நீதிவான் முன்னிலையில் சந்தேகநபர் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் இரவு 9 மணியளவில் தமக்கு உணவு கேட்ட போது அவரது பெற்றோர்கள் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, சிறுவனின் தந்தை கம்பியால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.