போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள பெரஹெரா!
வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஐந்தாவது முறையாக குடியரசு பெரஹெர, எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளது.
75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
வண்ணமயமாக நடத்த ஏற்பாடுகள்
பெப்ரவரி 19ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கண்டி மங்களகூடத்தில் இருந்து ஆரம்பிக்கும் பெரஹெர, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி வழியாக ரஜ வீதியில் பிரவேசித்து மீண்டும் தலதாமாளிகையை வந்தடையும் என தலதா மாளிகை இணைப்பாளர் மற்றம் கலாசார அதிகாரி ஜெயம்பதி வெத்தகல தெரிவித்தார்.
அதோடு வருடாந்த எசல பெரஹெர போன்று யானைகள் மற்றும் நடனக் குழுக்களால் இந்த குடியரசு பெரஹராவை வண்ணமயமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜயம்பதி வெத்தகல தெரிவித்தார்.
மேலும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இம்முறை பெரஹெர ஏற்பாடு செய்யப்படுவதுடன், பெரஹராவை காணவரும் மக்களுக்காக கண்டி பெரஹரா வீதியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.