போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தமிழகத்தில் விஷப்பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
தமிழகத்தில் விஷப்பூச்சி கடித்து மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கொரடாச்சேரி அருகே திட்டாணிமுட்டம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 38) இவரது மனைவி வேதநாயகி. இவர்களுக்கு பிறந்த 3 வயதான தட்சயா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தட்சயாவை விஷப்பூச்சி கடித்ததால் அழுதுள்ளது.
இதை தொடர்ந்து பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தட்சயா பரிதாபமாக உயிரிழந்தது.
இது தொடர்பில் சிறுமியின் தாயார் வேதநாயகி கொரடாச்சேரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷப்பூச்சி கடித்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.