போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நிறுவனத்தில் வித்தியாசமான காரணத்தை சொல்லி விடுமுறை கேட்ட நபர்!
நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக ஒரு நாள் மட்டும் தான் விடுமுறை தருவார்கள். அதிலும் ஏதேனும் அவசரத்தேவைகள் என்றால் விடுமுறை எடுப்பதற்கு ஏராளமாக பொய்கள் சொல்லுவது உலக வழக்கம்.
இவ்வாறு இருக்கையில் பத்திரிக்கையாளர் ஒருவரின் லீவ் வெட்டர் (Leave Letter) தற்போது பார்வையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஊடகம் ஒன்றில் பணிபுரியும் பத்திரிகையாளர் ஒருவர் வித்தியாசமான காரணத்தை சொல்லி விடுமுறைக் கேட்டுள்ளார்.
குறித்த பத்திரிக்கையாளர் தனது உயர் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு விடுப்பு கேட்டிருக்கிறார்.
அவர் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்ததாவது,
வீட்டில் ரிலாக்ஸாக pitchers season 2 பார்க்க வேண்டும். ஆகையால் டிசம்பர் 2-ம் திகதி விடுமுறை தேவைப்படுகிறது.
ஏனெனில், ரொம்ப பிடித்தமான இந்த வெப் சீரிசை வார நாட்களில் வேலையெல்லாம் முடித்துவிட்டு வந்து இரவெல்லாம் கண்விழித்து பார்க்கிறேன். இதனால் என்னுடைய தூக்கம் கலைகிறது.
என்னுடைய வேலைகளை வழக்கம்போல டிசம்பர் 24ம் திகதி தொடர்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
விடுமுறையை சாதாரணமாக்குங்கள், நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது நீங்கள் இல்லாமல் வேலை நடக்காது என்ற போது மட்டும் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பதிவிட்டிருக்கிறார்.
இந்த டுவிட்டர் பதிவிற்கு இணையவாசிகள் பலர் ஆதரவு தெரிவித்தும் சிலர் மீம்ஸ் கிரியேட் செய்தும் வருகின்றனர்.