போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி துரைராசா புனிதவதி – துயர செய்திகள்
யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா புனிதவதி அவர்கள் 09-11-2022 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், சிவகுரு பாக்கியலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,துரைராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,சசிகலா, சரவணபவன், வசிகரன், விசிகரன், லக்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,இளந்திரையன், செல்வி, சோபா, சுபா, துரைசிங்கம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,அஜினன், அக்ஷயன், அபிநவன், செளமிகா, சஜினி, கஜின், ஆதிஷ், வைஷ்னவி, அதிசயன், அபிசயன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, சிற்றம்பலம் மற்றும் பகவதி, குகதாசன், கணேசலிங்கம், நடராசா, யோகேஸ்வரி, மாணிக்கவாசகர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், யோகராஜா, பராசக்தி, அண்ணாத்துரை மற்றும் மணி, கோவிந்து, விஜயா, நவரட்ணராணி, இராஜேஸ்வரி, கமலேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான போசராசா, சின்னகிளி மற்றும் சுதாமதி, வரதராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.