போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
விரைவில் மின் கட்டணம் குவிரைவில் மின் கட்டணம் குறைக்கப்படும்! ஜனாதிபதியின் அலோசகர் அறிவிப்புறைக்கப்படும்! ஜனாதிபதியின் அலோசகர் அறிவிப்பு
நாடு இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டாலும் டிசம்பருக்குள் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன (Ruwan Wijewardena) தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பொருட்களின் விலை சிறிது சிறிதாக குறைக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மின் கட்டணமும் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அரசியலைப் பற்றி சிந்திக்காமல் மக்களைப் பற்றி சிந்தித்து இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) முன்வந்தார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாடெங்கிலும் வரிசையில் நிக்கும் நிலைமை மாற்றியமைக்கப்பட்டது என்றும் 2 மாதங்களில் அந்த யுகத்தை மக்கள் கடந்திருந்தார்கள் என குறிப்பிட்டுள்ளார்.