போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இந்தியாவில் நிடுநடுக்கம் ஏற்பட்டால் இலங்கையை பாதிக்கலாம்!
அண்டைய நாடான இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அதனுடைய தாக்கம் இலங்கையை பாதிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
உலகில் தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் படி குறித்த தினத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என முன்கூட்டியே அறிவிக்க முடியாது.
ஜப்பான், துருக்கி அல்லது உயர் தொழில்நுட்பம் கொண்ட மற்ற நாடுகளால் கூட நிலநடுக்கம் ஏற்படும் திகதியை அறிவிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டின் அமைவிடத்தின் படி வலுவான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தைச் சேர்ந்த சிரேஷ்ட புவியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களைப் பார்க்கும்போது, ரிக்டர் அளவுகோலில் இது 3 மற்றும் 5 ரிக்டர் அளவிலேயே ஏற்பட்டுள்ளன.
அந்த நிலநடுக்கங்கள் பல்லேகல, புத்தல, ஹக்மன, மஹகனதரவ ஆகிய பகுதிகளில் பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.