போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி இரத்தினாம்பிகை சாந்தலிங்கம்
யாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Dr. E. A. Cooray Mawatha ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினாம்பிகை சாந்தலிங்கம் அவர்கள் 01-06-2023 வியாழக்கிழமை அன்று 95 வது வயதில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாந்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலசீலன்(குகதாசன்), சுகராஜன், விமலதாசன், தவமலர், பரமதாசன், குமாரதாசன், திருமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தினி, யோகராணி, நந்தினி, காலஞ்சென்ற குகநாதன்(மகாராஜா பூட்ஸ்), லதாயினி, சிவசக்தி, சிவசக்திவேல் ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, துரைசிங்கம், இராசரட்ணம் மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவித்திரா- மயூரேசன், லாவண்யா, மாதுசன், அனுர்த்தன், திவாஸ்கர், ராகவி, ஜீவிகா, ஜோதிகா, விஜயானந்த்- மித்ரா, வித்தியநாத், கோகுல்நாத், கவான், மிதுன், விதுசா, விக்னவி, அனோஜன், அஞ்சுகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆதியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.