போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி இரத்தினம்மாள் கந்தையா
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம்மாள் கந்தையா அவர்கள் 17-05-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா லட்சுமி தம்பதிகளின் பாசமிகு மகளும், அம்பலவாணர் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி, முருகானந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தலோஜன், ஜெகதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவக்கொழுந்து, சிவபாக்கியம், பரமராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கீர்த்திகா, பிரணவன், மாதங்கி, ஆதவன், அர்ச்சனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.