போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு விஜயகுமார் முத்துகுமார்
யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் முத்துகுமார் அவர்கள் 28-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் கண்மணி தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,தர்மலிங்கம் இரத்தினம் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,விமலாதேவி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,சஞ்ஜித்குமார், கஜந்தகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,மாலினி சஞ்ஜித்குமார் அவர்களின் அன்பு மாமனாரும்,செல்வகுமார், தர்மமூர்த்தி(பிரித்தானியா), பாஸ்கரமூர்த்தி, ஜெயலஷ்மி, டாக்டர் நவலஷ்மி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், சுகுமார், மகாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கலியாணசுந்தரம் பிள்ளை, காலஞ்சென்ற கமலாதேவி, பாலசுந்தரம் பிள்ளை(முன்னாள் துணைவேந்தர்), டாக்டர் விமலேந்திரன், பாலேந்திரன், யோகேந்திரன், ரவீந்திரன், புவனேந்திரன், நிர்மலாதேவி லோகராஜ், காலஞ்சென்ற வத்சலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.