போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு விஜியரட்ணம் செந்தூரன்
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட விஜியரட்ணம் செந்தூரன் அவர்கள் 15-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற விஜியரட்ணம், பத்மினி தம்பதிகளின் பாசமிகு ஏக புத்திரரும்,
விஜியந்தினி(அவுஸ்திரேலியா), ஜெயந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காந்தரூபன், கபிலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திரிஷாலா, வித்யா, அஷ்விகா, தீப்ஷிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜா சிவபாலன் அவர்களின் பாசமிகு மருமகனும்,
பாலேந்திரா சிவலிங்கம் அவர்களின் அன்பு பெறாமகனும் ஆவார்.