போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவது ஒரு அதிசயமே! அமைச்சர்
நாடு எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராய்ந்து பார்க்கும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே காணப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவது ஒரு அதிசயமே! அமைச்சர் | Timely Salary Government Employees Is A Miracle
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலை நடத்த பணம் கொடுக்க மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் செலவினங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எங்களின் செலவினங்களுக்கு சரியான முன்னுரிமை அளித்ததால், நீண்ட எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். 12 மணி நேர மின்வெட்டை ஓரிரு மணி நேரமாகக் குறைத்துள்ளோம்.
மருந்துத் தட்டுப்பாடு இருந்தாலும், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு. அன்றைக்கு விவசாய உரத்துக்காக கூக்குரலிட்ட விவசாயிகள் தற்போது நெல்லை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே, ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது.
ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து செலவுத் தலையீடுகளுக்கும் பணம் ஒதுக்காமல் இதைச் செய்தோம். அதனால்தான் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அனைத்து அமைச்சுக்களின் செலவினங்களும் 5 சதவீதம் குறைக்கப்பட்டன.
அமைச்சகங்களின் செலவினங்களும் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளன.
தற்போது, உள்ளூராட்சித் தேர்தல் செலவுகளுக்கு எப்படி முன்னுரிமை அளிப்பது என்பதுதான் பிரச்சினை. எங்கள் வாதம் முழுக்க அதன் அடிப்படையிலேயே உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.