போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி தவமணி கந்தையா
யாழ். சாவகச்சேரி வடக்கு ஐயா கடையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி கந்தையா அவர்கள் 10-06-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அபிராமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
Dr அனுசியா, Dr அனுசாந்தி, அனுராதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரவி அவர்களின் அன்பு மாமியாரும்,
சௌம்யா, மதுஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சரவணமுத்து, தியாகராசா, காலஞ்சென்றவர்களான பூமணிதேவி, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.