போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – லயன் Dr பொன்னம்பலம் சண்முகரத்தினம் (J P)
யாழ். மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், கைதடியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சண்முகரத்தினம் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கமலாம்பிகை தம்பதிகளின் ஏக புதல்வனும், மற்றும் காலஞ்சென்ற தங்கலட்சுமி அவர்களின் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் திருப்பதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
நளினி(நோர்வே), ஜெயமாலினி, ஜெயந்தினி(நோர்வே), Dr.பரமானந்தம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கருணானந்தன்(நோர்வே), சத்தியேந்திரன்(நியூபாமா ஹாட்வெயார்- யாழ்ப்பாணம்), பகீரதன்(நோர்வே), Dr.அட்சரேஸ்வரி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அட்சயன்(நோர்வே), அபிசரன்(நோர்வே), அபிராமி(நோர்வே), நிசான், ஆகார்சன்(அவுஸ்திரேலியா), அபிசயன்(அவுஸ்திரேலியா), அக்ஷயா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
சண்முகதேவர், சண்முகானந்தன், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் சண்முகலிங்கம் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சூரியகுமாரன், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.