போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி விவேகானந்த நகரை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா சிறிநகர் பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதர் பரமலிங்கம் அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதர், சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா(கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை(முரசுமோட்டை), சுப்பிரமணியம்(முரசுமோட்டை), சின்னம்மா(பரந்தன்) மற்றும் பொன்னம்மா(பரந்தன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன் மற்றும் அருளாம்பிகை(வவுனியா), நகுலேஸ்வரி(இலண்டன்), மதிவாணி(கனடா), புகனேஸ்வரன்(பிரான்ஸ்), சிறிரஞ்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவா, பத்மாநாதன், காலஞ்சென்ற இராஜேஸ்வரன், சாந்தினி, புவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, கண்மணி, சின்னத்தங்கச்சி, தர்மலிங்கம், வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரமநாதன், சித்திராதேவி, துஷ்யந்தன், டிஷாந்தி, சர்மி, கஜந்தன், பிரித்திகா, பிருந்திகா, பிரியங்கா, கீர்த்தனன், றோகிர்த், ஈதன், காலஞ்சென்ற தருசன் மற்றும் தர்சிகா, துஸ்சியந்தன், காவியா, ரவிசங்கர், உஷாயினி, துஷாயினி, பிரதீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜிபிசன், சஜிசா, றிதிஸ், வினிஸ், மினிஷா, துருவன், சத்விகா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.