போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கம்பஹாவில் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது !
சீதுவை – கொட்டுகொட வீதியில் கொட்டுகொட , கலிகன்எலிய சந்தியில் வைத்து டுபாயில் வசிப்பதாக கூறப்படும் பாதாள உலக உறுப்பினர் கம்பஹா பத்மாவின் நெருங்கிய சகா என அறியப்படும் கிஹான் என்ற மண் வர்த்தகத்துடன் தொடர்புபட்ட நபர், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (23-12-2022) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
இலைக்கஞ்சி கொள்வனவுச் செய்வதற்காக கலிகன்எலிய பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போதே அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது இலைக்கஞ்சி விற்ற 62 வயது பெண்ணும் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணும், கிஹான் எனும் நபரும் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கிஹான் உயிரிழந்துள்ளதாகவும், காலில் குண்டடிபட்ட பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.