போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
தொழிலதிபர் தினேஸ் கொலையால் இலங்கையில் இன்றுவரை நீடிக்கும் மர்மம்
இலங்கை தொழிலதிபர் தினேஸ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் (23-12-2022) ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும் அவரது கொலையுடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு எந்தவித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர் சென்ற சிற்றுண்டிச்சாலை வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலை அல்ல என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் அன்றைய தினம் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு சென்றமைக்கு அவர் நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் இல்லை என சிற்றுண்டிச்சாலையின் பேச்சாளர் ஒருவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், கொழும்பு 07, ப்ஃளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து பொரளை பொது மயானத்திற்கு பயணித்த தினேஸ் ஷாப்டர் மலலசேகர மாவத்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருவருக்கு தேவையான சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில் குறித்த உணவை கொள்வனவு செய்ய சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிசிரிவி கெமராக்கள் சிற்றுண்டிச்சாலையில் பொருத்தப்பட்டிருக்காமை, விசாரணைகளுக்கு தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டையை அவர் பயன்படுத்தினாரா என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.