போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
கல்வி அமைச்சர் போதைப்பொருள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை!
பாடசாலை மாணவர்களையும் அவர்களது பைகளையும் பொலிஸாரின் உதவியுடன் தற்செயலாக சோதனையிட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பாடசாலைகளுக்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படுவதாக அண்மைய நாட்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
களுத்துறை வடக்கு பொலிஸார் இன்று பயிற்சி பெற்ற நாய்களின் உதவியுடன் சோதனையை மேற்கொண்டனர். மேலும் பாடசாலையை சுற்றியுள்ள இடங்களிலும் பொலிசார் சோதனை நடத்தினர்.
இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் பாடசாலை மாணவர்களை விடுவிக்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கல்வி தொடர்பான முதலாவது ஆய்வு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.