போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
நீண்ட நாட்களுக்கு பின் காப்பாற்றப்பட்ட கடற்தொழிலாளர்கள்!
சாமி மல்லி எனும் மீன்பிடி படகில் தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.
ஐந்து நாட்களுக்கு முதல் ஆறு கடற்தொழிலாளர்கள் மீன் பிடிப்பதற்காக சென்ற போது குறித்த படகு ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு பின்னர் தற்போது அந்த படகு மீட்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்து மூன்று கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த படகில் பயணித்த மற்ற மூன்று கடற்தொழிலாளர்களை தேடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில்,மற்றுமொரு மீன்பிடி படகால் இந்த படகு மீட்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து மீடகப்பட்டுள்ள கடற்தொழிலாளர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் ஹபராதுப பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.