போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
பிரித்தானிய தூதுவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட யாழ்.மாநகர முதல்வர்!
யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை (V.Viswalingam Manivannan) இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் (Sarah Hulton) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை (30-11-2022) இடம்பெற்றுள்ளது.
யாழ். மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார்.