போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மட்டக்குளி பிரதேசத்தில் நபரொருவரின் சடலம் மீட்பு
மட்டக்குளி பிரதேசத்தில் நேற்று (11) மாலை நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலம் மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கதிரான பாலத்திற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை
கந்தானை பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அச் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை இன்று (12) நடைபெறவுள்ளதுடன் மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.