போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு 6வது முறையாக முன்னேறிய அர்ஜென்டினா
2022 ஆண்டுக்கான ஃபிஃபா உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இன்றைய அறையிறுதி போட்டியில் குரோஷியா அணியை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் குரோஷியா மற்றும் அர்ஜென்டினா அணிக்கு இடையே அரையிறுதி போட்டி தொடங்கியது.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி முதல் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார்.
39 வது நிமிடத்தில் அந்த அணியின் மற்றொரு வீரர் அல்வொரெஸ் கோல் அடித்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
2வது பாதியின் 69 வது நிமிடத்தில் மெஸ்சி கொடுத்த வாய்ப்பை பயன்படுத்தி அல்வொரெஸ் மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினா வெற்றியை உறுதி செய்தார்.கூடுதல் ஆட்ட நேர முடிவு வரை குரோஷியா வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இதயைடுத்து 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய அர்ஜென்டினா இறுதி போட்டிக்குள் நுழைந்தது.