போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு பேதுருப்பிள்ளை சிறில் (துரை)
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை சிறில் அவர்கள் 03-06-2023 சனிக்கிழமை அன்று இலங்கையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, லூர்தம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியா(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
பகீதரன்(றெஜிசன்), றெஜித்தா(லண்டன்), றீனா, யசோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜோன்(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
யூலியன், அமாலியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேவதிரவியம்(குணம் கிறீம்கவுஸ்- இலங்கை), பெனடிற் அம்மா(செல்வராணி- கனடா), பற்றிமாராணி(செல்வரத்தினம்- கனடா), காலஞ்சென்ற மாசில்லாராணி(செல்லமலர்), திருஞான செல்வம்(செல்லம்- கொலண்ட்), பற்றிக்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராசா, தவராணி(இலங்கை), தேவராசா(ஜேர்மனி), காலஞ்சென்ற தேவி, யோகராசா(ராசா- நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.